நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்க்கொள்வது கோபம்,இந்த கோபத்தினால் நாம்
அனைத்தையும் இழக்கின்றோம்(உறவுகள்,வேலை மற்றும் பல..)
நமக்கு நடக்கும் சம்பவத்தில் பிறர் நம்மேல் கோபம் காட்டும் பொழுது நாம்
அமைதியாக இருக்க வேண்டும்(நமக்குள் வேறு சிந்தனையை சிந்திக்க
வேண்டும் மாறாக அவர்களிடம்
கோபம் கொண்டால் நமக்கும் அறிவிழந்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.
(எ.கா) ஒருவர் ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்தார் .
அப்பொழுது ஒரு தேள் தண்ணீருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது
,அதை பார்த்த அவர் அந்த தேளை தன் கை விரலில் எடிக்க முயற்சித்தார் ஆனால்
தேளோ அவரின் விரலை கொட்டியது, அவர் தான் விரலை உதறினார் பின்பு தேள்
தண்ணீருக்குள் விழுந்தது ,மீண்டும் முயற்சித்தார் மீண்டும் கொட்டியது
அவர் தன் கை விரலை உதறினார் பின்பு தேள் தண்ணீருக்குள்
விழுந்தது,மீண்டும் முயற்சித்தார் இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் அவரை
நோக்கி கேட்டார் ஏன் தேள் தான் உங்களை கொட்டுகிறதே மீண்டும் ஏன் அதை
காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபாட வேண்டும் அதற்கு அவர் இவ்வாறு பதில்
அளித்தார் ..தேளின் குணம் கொட்டுகிறது ஆனால் மனிதனின் குணம்
மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் தேள் அதனின் குணத்தை மாற்றவில்லை
பிறகு நாம் ஏன் நம்முடைய குணத்தை மாற்ற வேண்டும் என்றார் ...
"நாமும் மனிதனின் குணத்தை மாற்றாமல் வாழ முயற்சிப்போம்........!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment